தீயினில் எரியாத தீபங்களே - நம்
தேசத்தில் உருவான ராகங்களே
தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்
தரணியில் காவிய வடிவெடுத்தீர்
மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே
தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே
தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே
தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே
புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே
மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!
பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே
மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!
இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்
இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்
விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்
ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே
ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து ஒளி முகம் தோறும் புலி முகம் பார்த்து
குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே
குலதெய்வம் போல உம்மை கும்பிடுவோம் நாங்களே
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே
உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்
மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்
உலகம் தோறும் உள்ள சொந்தம் உங்கள் வீரம் நினைக்கும்
மழையும் கூட இறங்கி வந்து உங்கள் துயிலிடம் நனைக்கும்
பதுங்கு குழியில் இருக்கும் பிள்ளை என்று தாய்மை நினைக்கும்
அது பத்து மாதம் சுமந்த வயிற்றை தடிவி பார்த்து சிலிர்க்கும்
இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்
கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்
அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்
கோயில் மணிகள் உங்கள் புகழை ஊர்கள் தோறும் ஒலிக்கும்
அமைதி வணக்கம் முடிந்த நொடியில் ஈகை சுடர்கள் விழிக்கும்
தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்
தலைவர் உரை எழுந்து உம்மை களங்களாட அழைக்கும்
இறந்தவர் என்றா மறப்போம் உம்மை எத்தனை தலைமுறை நினைப்போம்
காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறை அல்ல
உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)
தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை
தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)
குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்
நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால்
இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்
இள்வேனில் நாளில் உதிர்ந்தார்
தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து
மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால்
மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால்
தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் தமிழீழ காலத்தால்
விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே
[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள் (விண்வரும்.....)
எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்
[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள் (விண்வரும்.....)
உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்
[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.
சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்
தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்*
கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை
கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்*
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன
மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்
கண்ணுக்குள்ளே வந்து கன வாகி நிற்பவர்- வெல்லும்
காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு
பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து
நாயகர்கள் கல்லறைகள் மீது
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.
வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
ஆஆஆஆஆஆ.........
[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
[மறைந்திடுமோ உம் நினைவு
அழிந்திடுமோ உம் கனவு] 2
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
ஆஆஆஆ........
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்
[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்
தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2
விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்
[எரிமலையாய் நாம் எழுவோம்
விடுதலைக்காய் தலை தருவோம்] 2
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
ஆஆஆஆ.........
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்
[பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்
புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2
பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர்
[கடமையினை நாம் மறவோம்
பயிற்சியினை நாம் பெறுவோம்] 2
தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்
தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்
ஆஆஆஆ.......
கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....
எங்கள் தோழர்களின் புதைகுழியில்
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
ஈழம் மீட்பது உறுதி
இளமைநாளின் கனவையெல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்
கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்
வாழும்நாளில் எங்கள் தோழர்
வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்
தோழர் நினைவில் மீண்டும் தோளில்
துப்பாக்கிகளை அணைக்கின்றோம்
தாவிப்பாயும் புலிகள்நாங்கள்
சாவைக்கண்டு பறப்போமா
பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போனவழியை மறப்போமா
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி!!!