மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை
    நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.

    சிங்களவன் படை வானில்
    நெருப்பை அள்ளிச் சொரியுது
    எங்களுயிர் தமிழீழம்
    சுடுகாடாய் எரியுது
    தாய் கதற பிள்ளைகளின்
    நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
    காயாகும் முன்னே இளம்
    பிஞ்சுகளை அழிக்கிறான்.

    பெத்தவங்க ஊரில
    ஏங்குறாங்க பாசத்தில
    எத்தனை நாள் காத்திருப்போம்
    அடுத்தவன் தேசத்தில
    உண்ணவும் முடியுதில்லை
    உறங்கவும் முடியுதில்லை
    எண்ணவும் முடியுதில்லை
    இன்னுந்தான் விடியுதில்லை

    கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள்
    விளையாடும் தெருவில
    கட்டிவச்சுச் சுடுகிறானாம்
    யார் மனசும் உருகல
    ஊர்க்கடிதம் படிக்கையில
    விம்மி நெஞ்சு வெடிக்குது
    போர்ப்புலிகள் பக்கத்தில
    போக மனம் துடிக்குது


    எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
    இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
    எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

    காற்றும் நிலவும் யாருக்கெனினும்
    கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
    போகும் திசையில் சாகும்வரையில்
    புலிகள் பணிவதுமில்லை
    காற்றும் நிலவும் யாருக்கெனினும்
    கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
    போகும் திசையில் சாகும்வரையில்
    புலிகள் பணிவதுமில்லை
    மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
    முளைப்போம் இந்த மண்ணில்
    மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
    முளைப்போம் இந்த மண்ணில்
    எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
    மூட்டும் தீயைக் கண்ணில்

    எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
    இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
    கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
    கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்
    எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
    எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

    எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
    இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது

Thank you! for sending this Webpage to your friend








காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.